இயக்குனர் மித்ரனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- பெண் யார் தெரியுமா?

124

 

தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்குமே சினிமா வாழ்க்கை கொடுக்கிறதா என்றால் கேள்விக்குறி தான், ஆனால் கடும் முயற்சியால் சிலர் தனது முதல் படத்திலேயே வெற்றியை காண்கின்றனர்.

அப்படி 2018ம் ஆண்டு இரும்புத்திரை என்ற படத்தை இயக்கி வெற்றி இயக்குனர்களின் லிஸ்டில் இணைந்தவர் தான் பிஎஸ் மித்ரன்.

அப்படத்தை தொடர்ந்து மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கினார், ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை.

தற்போது கார்த்தியை வைத்து சர்தார் என்ற படத்தை இயக்கி வருகிறார், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

நிச்சயதார்த்தம்

இந்த நேரத்தில் இயக்குனர் மித்ரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பத்திரிக்கையாளர் ஆஷா மீரா என்பவருடன் தான் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக அனைவரும் புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

SHARE