எங்களுக்கு தொடர்பில்லை… ஈரான் திட்டவட்டம்

93

 

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஈரான் வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் நஸீர் கனானி தெரிவிக்கையில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75) தாக்கப்பட்ட சம்பவத்தில் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரும் பழி மற்றும் குற்றச்சாட்டுக்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் கருதவில்லை.

மேலும், இந்த விவகாரத்தில் ஈரான் மீது குற்றச்சாட்டுகளை கூறும் உரிமை யாருக்கும் இல்லை என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், அவரது கல்லீரல், கண்கள், கை நரம்புகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக ருஷ்டியின் உதவியாளர் தெரிவித்திருந்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஹாதி மடார் (24) குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் விசாரணைக் கைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE