சப்பாத்திக்கு அருமையான மட்டன் தால்

259
சப்பாத்திக்கு அருமையான மட்டன் தால்

மட்டன் தால்
தேவையான பொருட்கள்:

மட்டன் – 350 கிராம்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை – சிறிது
தக்காளி – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
துவரம் பருப்பு – 1/2 கப்
தண்ணீர் – 2-3 கப்
கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

மட்டனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, மட்டன், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி 5 விசில் வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்துகுழைய வதக்கவும்.

அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து மட்டன் பருப்பை சேர்த்து கிளறவும்.

அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

அனைத்து ஒன்றாக சேர்த்து திக்கான பதம் வரும் போது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், மட்டன் தால் தயார்.

இந்த மட்டன் தால் சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.

SHARE