சீனாவின் இரசாயன பிடிக்குள் இலங்கை – நடப்பது என்ன?

472

இலங்கையை பொருத்தவரையில் இயற்கை வளம் கொண்ட நாடாக திகழ்ந்துவருகின்றது. குளிர், வெப்பம், இடைநிலை போன்ற மூன்று காலநிலைகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும். அதுமட்டுமன்றி இயற்கை பாதுகாப்பை கொண்ட முக்கிய தளமாக திருகோணமலை துறைமுகம் விளங்குகின்றது. இரண்டாம் உலகபோரின் போது கொல்லப்பட்ட 110 சடலங்கள் திருகோணமலையில் புதைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இந்தியாவை அல்லது ஆசிய நாடுகளை இலக்கு வைக்க வேண்டுமாக இருந்தால் இலங்கை தீவை பயன்படுத்துவதனூடாக அனைத்து விடயங்களையும் சாதிக்க முடியும் என்பதை வல்லரசுகள் கண்டிறிந்துள்ளன. இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது என்பதால் அனைத்து இரசாயன பொருட்களையும் பரீட்சித்து பார்ப்பது என்பது மிக இலகுவானதொன்று வான் மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் பயணத்தடையை ஏற்படத்தினால் எவரும் சென்று வருவதற்கான நிலைமைகள் உருவாக்கப்படாது.

ஆகவே பூகோள ரீதியில் இலங்கையின் அமைப்பு என்பது இயற்கையாக வந்தது ஒன்று. தற்பொழுது கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயை பரப்பிய சீனா இறுதி பரீட்சாத்தமாக இலங்கையில் பரீட்சித்து வருகின்றது. சீனா வடகொரியாவிற்கு அனுப்ப இருந்த கொரோனா தடுப்பூசிகளை அந்நாட்டின் ஜனாதிபதி ஜிம் ஜொங் எமது நாட்டுக்குள் எந்தவொரு தடுப்பூசியையும் எவரும் தரவேண்டிய தேவையில்லை எனவும் எமது நாட்டின் பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்திக்கொள்வோம் என்பதாகும். அத்தகைய நிலைமையை ஏன் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. ஆளுமையற்ற அரசாங்கமாகவே ஜனாதிபதி கணிக்கப்படுகின்றார். உலக நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்தபொழுது முதலாம் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என குறைந்த எண்ணிக்கையானவர்களே மரணமடைந்தார்கள் அதாவது நூற்றுக்குட்பட்டவர்கள். முதலாம் அலையில் 5 மரணங்கள் கூட நிகழவில்லை. இரண்டாம் அலையில் 20 மரணங்கள் கூட நிகழவில்லை. மூன்றாம் அலையை தொடர்ந்து நான்காம் அலையில் மரணங்கள் தாண்டிவிட்டது. இதனால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கப்படுகின்றது. கொரோனா வைரசின் தாக்கத்தினால் 200 க்கும் மேற்பட்ட மரணங்கள் நாளாந்தம் ஏற்படுகின்றது. குறித்த சீன நாட்டினால் பரப்பப்பட்ட கொடிய வைரஸ் அதற்கான பரிகாரத்தை செய்கின்றோம் என்று இலங்கை அரசை கடனாளிகளாக்கி இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குத்தகைக்கு எடுத்து மீள முடியாத கடனில் இலங்கை தீவை அமுல்த்தியுள்ளது. இத்தகையதொரு சூழ்நிலையில் கடன் சுமையினால் இலங்கை அரசு ஒரு பக்கம் தள்ளப்பட மறுபக்கத்தில் ஏனைய நாடுகளின் உதவிகளை புறம்தள்ளிய நிலையில் சீனாவிடமே கையேந்தி நிற்கும் சூழல் உருவாக்கப்படவுள்ளது. சீனா எதிர்க்கிறது என்ற நம்பிக்கையுடன் தனது காய் நகர்த்தல்களை நகர்த்தியுள்ள இலங்கை அரசு தற்பொழுது நிதி நெருக்கடிக்குள் சென்றிருக்கின்றது. தற்பொழுது மத்திய வங்கியில் மூன்று மாதங்களுக்கு போதுமான பணமே உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் உருவாகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்ட பொழுதும் அது மென்மேலும் இலங்கை அரசின் ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது. சீன அரசாங்கமானது இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கடன் சுமையில் இலங்கை அரசை தள்ளி அம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்பு போர்ட்சிட்டி போன்றவற்றினூடாக தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிராக எந்தவொரு நாடும் கிளர்ந்தெழுந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு சீனா தற்பொழுது தயாராகிவருகின்றது. இலங்கையானது சீனாவிற்கான ஒத்துழைப்புக்களை வழங்க தவறின் இலங்கையை ஒரு கெமிக்கல் கொண்டு அழிக்கக்கூடிய சக்தியை சீனா அரசாங்கம் கொண்டுள்ளது. இதனால் ஏனைய நாடுகள் பாதிக்கப்பட போவதில்லை. அதன்பின்னர் இலங்கையில் தனக்கான இராஜ்யத்தை சீன அரசாங்கம் நிறுவிக்கொள்ள ஏனைய நாடுகளை எடுத்துக்கொண்டால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல தரைவழிப்பாதை இருக்கின்றது.

ஆகவே பல விடயங்களையும் கருத்தில் கொண்டே சீன அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு இலங்கை மீது அதியுச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரசினுடைய தாக்கத்தை ஈடு கொடுக்க முடியாத இலங்கை பொருளாதார நிலையில் பாரிய விழ்ச்சி கண்ட நிலையில் மிக முக்கியமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததுடன் பொருட்களுக்கான விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடான நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் சீனாவை மட்டும் இலங்கை அரசாங்கம் நம்பியிருப்பது என்பது மீண்டும் மீண்டும் இலங்கை அரசை அதாள பாதாளத்திற்குள் கொண்டுசெல்லும் ஒரு நிலைமையை உருவாக்கும். கொரேனாh வைரசினுடைய உருவாக்கம் இலங்கையை தொடர்ந்தும் தாக்க காரணம் என்ன என்பது பற்றி ஆராய்ந்து செல்வோமாக இருந்தால் சீனாவினுடைய சூழ்ச்சிகளே காரணமாக அமைகிறது. இதிலொரு விடயம் என்னவென்றால் தடுப்பூசி ஏற்றப்படுபவரும் மரணிக்கின்றார் ஊசி ஏற்றாதவரும் மரணிக்கின்றார். மரணத்தின் வேகம் அதிகரித்து செல்கின்றது. சீனாவில் வுகான் மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இந்த கொடிய வைரஸ் அதன் பகுதியிலே நொடிப்பொழுதில் சீன அரசாங்கம் அழித்தது. அப்பொழுது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டார்கள். இச் சம்பவத்தை வெளியிட்ட அந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரையில் தெரியவில்லை. இக் கொடிய வைரஸ் தொடர்பிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த வெளவால் பெண் என அழைக்கப்படும் ஷி ஜெங்லி என்பவருக்கு என்ன நடந்தது என்பதும் இதுவரையிலும் அறியப்படாத உண்மை. குறிப்பாக இவ் வைரஸ் தொடர்பாக தன்னை எந்த ஊடகங்களுக்கும் அல்லது நாடுகளுக்கும் தெரியப்படுத்தகூடாது என்ற எச்சரிப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்படியாக இருந்தால் திட்டமிட்டே சீன அரசு ஒவ்வொரு நாட்டின் மீதும் தனது சர்வதிகாரத்தை திணிக்கும் வகையில் மாஸ்க், வென்டலேட்டர், கொரோனா தடுப்பூசி போன்றவற்றை தமது நாட்டிலிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடே இவ்வாறான வைரசை பரப்பியது.
குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளும் அதனோடு சார்ந்த ஒரு சில நாடுகளும் தமக்கான கொரோனா தடுப்பூசிகளை தாமே தயாரித்துக்கொண்டார்கள். சீனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களின் ஆயுட்காலம் குறைக்கப்பட வேண்டும், கருத்தடை ஏற்படுத்த வேண்டும் ஆண்மையற்ற சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசியினூடாக பல வருடங்கள் கழித்து பாதகமான தன்மை உருவாக்கப்படும் என பல நாடுகள் எச்சரிக்கின்றது. அதன் காரணமாக சீன அரசாங்கத்தின் தடுப்பூசிகளை பல நாடுகள் பெற்றுக்கொள்ளவில்லை. தனது ஒருநிலைப்பிடிக்குள் உலக நாடுகளை கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாடு இதிலும் நழுவிப்போனது ஆகவே மற்றுமொரு உத்தியை சீனா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கையாள வேண்டிய சூழல் உருவானது. அதனை தற்பொழுது திட்டமிட்ட வகையில் செயற்படுத்துவதற்கு இலங்கை தீவு முக்கியம் வாய்ந்ததாக அதனை கண்டறிந்துள்ளது. சீனா, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளை தனது கையடக்கத்துக்குள் கொண்டுவரவேண்டுமாக இருந்தால் இலங்கை தீவை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு நிலைப்பாட்டை சீனா நிச்சயம் கையில் எடுத்தாக வேண்டும். அமெரிக்காவை பொறுத்தவரையில் கூகுள் நிறுவனத்தினூடாக றுறுறு. என்ற இணையத்தின் இயக்கமின்றி உலக நாடுகளில் எதுவும் இயங்கமுடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று எந்தவொரு தொழினுட்பத்தை இயக்க வேண்டுமாக இருந்தாலும் இதனுடைய பாவனை இன்றி இயக்க முடியாது. அனைத்தும் இந்த றுறுறு. என்ற முகவரிக்குள் அடங்கிவிடுகின்றன. இவ்வாறான ஒரு அப்சை பல நாடுகள் உருவாக்கி வந்த பொழுதிலும் அவை அனைத்தும் அதில் தோல்வி கண்டுள்ளன. அனைத்து நாட்டின் பிரஜைகளையும் ஏதோவொரு வழியில் உள்வாங்கிக்கொண்டே உள்ளது. அதற்கு அவர்கள் அடிமையாகவே உள்ளனர்.

குறிப்பாக ஒரு நாட்டில் உள்ளவர்களை கண்டறிய வேண்டுமாக இருந்தால் பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப், வைபர், இன்ஸ்டாகிராம் போன்ற பல அப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு நாட்டு பிரஜைகளின் தரவுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இன்டர்நெட்டின் இயக்கங்கள் இன்றி தொழினுட்ப ரீதியாக இயங்கக்கூடிய எந்தவொரு விடயங்களும் இயங்க முடியாது. ஆகவே அதனை ஒரு குடையின் கீழ் சர்வதேசயுனிட் கொண்டு வந்துள்ளது. இந்த சர்வதிகார தன்மையை ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற சீனா எடுத்த இரசாயன ஆய்வு தான் கொரோனா வைரஸ். உலக மக்களிடையே வியாதிகளை பரப்பி அதனை செயலிழக்கின்ற மாத்திரைகளை தாமே தயாரித்து உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளையும் தமது கட்டுக்கோப்புக்குள் சர்வதிகார வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களுடைய நிலைபாடு. இதனோடு பல நாடுகள் விழித்துக்கொண்டதால் அந்த நாடுகள் தப்பித்துக்கொண்டன. ஆகவே இதற்கான மாற்றுவழி என்பது இலங்கைக்குள் இருந்து சீனாவை வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாடே. அமெரிக்காவையும் இந்தியாவையும் ஆதரிப்பதன் செயற்பாடே சீனாவை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான நிலைமையை உருவாக்க முடியும். இல்லையென்றால் கொரோனா வைரஸினுடைய ஐந்தாம் அலையும் தாக்குகின்ற சூழல் உருவாக்கப்படும். நான்காம் அலையினுடைய இலங்கையினுடைய அனைத்து நிலைகளும் சம்பிதமடைந்துள்ள நிலையில் ஐந்தாம் அலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கும் சூழல் ஏற்படும். இரண்டு ஊசிகளை போட்டவர்கள் மட்டுமே தப்ப முடியும் என்ற சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் அதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும். இன்று ஊசிகளை போடாதவர்களும் நலமுடன் வாழ்கின்றார்கள். ஊசி போடுவதனால் பாதக தன்மையை கொடுக்கும் என்று பலர் மறைந்து வாழ்கின்றனர். இவ்வாறான தன்மை தோற்றுவிக்கப்படுகின்றது. மரணங்களின் வீதம் உயரும்பொழுது யாருக்கு யார் உதவி செய்வார்கள் என்ற நிலை ஏற்படும். இதில் சுகாதார துறையினர் மீதோ மருத்துவர்கள் மீதோ நிர்வாகத்தினர் மீதோ குறைகூற முடியாது. நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். குழி பறிப்பவனை அருகில் வைத்துக்கொண்டு நாம் எழுந்து வரமுடியும் என்று நினைப்பது முட்டாள்தனத்திலும் முட்டாள் தனம். இலங்கையில் 44 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு மீண்டும் வைரஸ் தாக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் தற்பொழுது சிகிச்சை பெற்றுவருகின்றார்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் திகழ்ந்திருக்கின்றது. 37 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். சராசரி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். இந்த நிலைமை ஏதோவொரு வகையில் மாற்றப்பட வேண்டும் அதற்கு ஒரேயொரு வழி சீனா தனது இராஜதந்திரங்களை எவ்வாறு திணிக்கின்றது எதிர்வரும் காலங்களில் ஆயுதமின்றி வைரஸ்களை தாக்கும் பரீட்சாத்தமானதே வைரசின் தாக்கமாகும். ஆகவே புலனாய்வாளர்களின் கையில் இந்த நாட்டை ஒப்படைத்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களில் எவ்வாறான பொருட்களில் வைரஸ் இருக்கின்றன காலப்போக்கில் எவ்வாறான பிரச்சனைகளை இது உருவாக்கும் என்பதை கண்டறிந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எந்தவொரு நாட்டின் இரசாயன தாக்கம் திணிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கையிலுள்ள சுகாதார அதிகாரிகள் தம்மை தயார்ப்படுத்திக்கொள்வார்கள். சம்பந்தப்படாதவர்களை சுகாதார அமைச்சர்களாக்கி வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படத்துங்கள் என்று அவரிடம் பொறுப்பை விட்டுவிட அவர் ஆத்திலே முட்டியடித்து நீர் ஊற்றிய சம்பவம் நாட்டு மக்களை முட்டாளாக்கும் செயற்பாடாக அமையப்பெற்றது. தற்பொழுது குறித்த அமைச்சர் போக்குவரத்து அமைச்சராக செயற்படுகின்றார். நிலைமை இவ்வாறிருக்க துறை சார்ந்தவர்கள் அந்தந்த துறைகளில் அதற்கான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளும் நிலைமைகளை உருவாக்க வேண்டும். அரசியல் சுயலாப நிலைமைக்காக தெருவில் இருப்பவர்களை கொண்டுவந்து சுகாதார அமைச்சராக நியமித்ததன் விளைவு 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்தும், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்பை சந்திக்கவும் நேர்ந்தது. ஆகவே இதற்கு மிக முக்கிய காரணமாக ஆரம்ப புள்ளியாக செயற்பட்டுவந்த சீனா அரசாங்கத்தை நுட்பமான முறையில் வெளியேற்றுவதன் மூலம் எதிர்வரும் வைரஸை எதிர்கொள்ளும் சூழல் உருவாக்கப்படும். இன்றைய பொருளாதாரநிலை மிக மோசமான நிலையை அடைவதற்கு தனியே ஜனாதிபதியை குறை கூறிவிட முடியாது. அவர் ஜனாதிபதி ஆட்சி பொறுப்பை கொரோனா வைரஸ் தாக்கம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்பொழுதே பொறுப்பேற்றார். அதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதா என்ற நிலைப்பாட்டில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னமும் அவரால் முடியாமல் உள்ளது. வானத்தால் போன சனியனை ஏணி வைத்து இறக்கியது போன்று இன்று சீனாவை இலங்கை அரசு ஏணி வைத்து இறக்கியுள்ளது. புத்திசாதூரியமாக செயற்பட்டால் மாத்திரமே இந்த இலங்கை தீவை கொடிய கொரோனா வைரஸிலிருந்து தக்கவைத்துக்கொள்வது மாத்திரமன்றி பொருளாதார ரீதியிலும் கட்டியெழுப்பமுடியும்.
ஆதித்தியன்

SHARE