துவிச்சக்கரவண்டியில் காலி முகத்திடல் நோக்கி பயணம்

316

 

காலி முகத்திடலில் இடம்பெறும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற நபர் காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கரவண்டியில் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணமானது இன்று (20) விசுவமடு சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நலன் கருதியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் குறித்த பயணம் மேற்கொள்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா சென்று வவுனியாவில் ஓய்வு எடுத்து பின் நாளை மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பதாகவும், நான்கு நாள் பயணமாக குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் மூவின மக்களும், பொலிஸாரும் தமது பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

SHARE