பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கொடூர சம்பவம்: பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

127

 

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலுமொரு பெண் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (22-06-2022) இட்ம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பில் தெரியவருவது,

கடலூர் அருகே எம்.புதூரை சேர்ந்த 36 வயதான மோகன்ராஜ், இவரது மனைவி வனிதா (30). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர்.

இதில் அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த பெரியகாரைக்காடு சித்ரா, வான்பாக்கம் அம்பிகா, மூலக்குப்பம் சத்தியராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு:

நெல்லிக்குப்பம் அருகே குடிதாங்கிச்சாவடியை சேர்ந்த சேகர் மனைவி வசந்தா (45), வெடி வாங்க வந்த வெள்ளக்கரையை சேர்ந்த வைத்தியலிங்கம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடலூர் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் வசந்தாவுக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று (23-06-2022) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE