பரியேறும் பெருமாள் பட புகழ் நெல்லை தங்கராஜ் உடல்நலக் குறைவால் காலமானார்

139

2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ்.

தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜூக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

SHARE