பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

130

 

உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களின் விபரம்
இதன் பிரகாரம் செய்முறைப் பரீட்சைகள் 19, 20, 21 ஆம் திகதிகளில் பின்வரும் பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி,செயன்முறை பரீட்சையின் ஒரு பகுதி அல்லது முழுமையான பரீட்சைக்கு தோற்ற முடியாத 425 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE