பல அடி உயரம் மேலே சென்ற பந்து! இரண்டு முறை தட்டி தட்டி கேட்ச் பிடித்த தினேஷ் கார்த்திக்

127

 

தென்னாப்பிரிக்காவுடனான 2வது டி20 போட்டியில் பந்தை தட்டி தடுமாறி பின்னர் சுதாரித்து கேட்ச் செய்த தினேஷ் கார்த்திக் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் ரிலி ரோஸ்வோ ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் விளையாடி கொண்டிருந்தார்.

தான் சந்தித்த இரண்டாவது பந்தை அவர் மேலே தூக்கி அடித்தார். பந்து பல அடி தூர உயரத்திற்கு சென்ற நிலையில் பீல்டிங்கில் நின்றிருந்த தினேஷ் கார்த்திக் கைக்கு சென்றது.அவர் எளிதாக கேட்ச் செய்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சிறிது தடுமாறி பந்தை இரண்டு முறை தட்டினார். பின்னர் ஒருவழியாக பந்தை பிடித்து கேட்ச் செய்து ரோஸ்வோவை அவுட்டாக்கினார்.

இதையடுத்து சக இந்திய அணி வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை கட்டிபிடித்து பாராட்டினார்கள்.

SHARE