புகையிரத அதிகாரசபை தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

88

புகையிரத தாமதங்களைத் தடுப்பதற்குத் தேவையான தீர்வுகளை வழங்க புகையிரத அதிகாரசபை தவறியுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத கால அட்டவணையை திருத்துவதன் மூலம் மாத்திரம் புகையிரத தாமதங்களை தடுக்க முடியாது என அதன் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

தற்போதைய புகையிரத தாமதம் காரணமாக களனிவௌி புகையிரத பாதையின் புகையிரத கால அட்டவணையை ஐந்தாம் திகதி முதல் திருத்தியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய அட்டவணையை அறிமுகப்படுத்துவதன் மூலம் புகையிரத பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை ஓரளவுக்கு தடுக்க முடியும் என பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

SHARE