பூமியைவிட மிகப்பெரிய கோள் கெப்ளர்-10 சி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

687

மனிதர்கள் வசிக்கும் இந்த பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும் இரண்டு மடங்கு பெரியதுமான கெப்ளர்-10 சி என்ற புதிய கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோள் 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

அதாவது, 1 ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல் தொலைவு ஆகும்.இந்த புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். பூமியைவிட பலமடங்கு பெரிய கோள் கெப்ளர்-10 சி- கோளை ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் பவுதிக மையத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்தக் கோள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

SHARE