இந்தப் புதிய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வரவில்லை, நாட்டை காப்பாற்றவே வந்ததாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஹரீன் பெர்னாண்டோ அமைச்சு பதவி ஏற்க தான் எடுத்த தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“பிரதமர் ரணில் விக்ரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தமையாலேயே அமைச்சு பதவியை ஏற்றோம்
கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் தற்போதும் எந்தவொரு மாற்றமும் இல்லை.நாங்கள் முன்வைத்த 7 கோரிக்கைகளையும் ரணில் ஏற்றுக்கொண்டார்.
இந்தப் புதிய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வரவில்லை, நாட்டை காப்பாற்றவே வந்ததாக கொழும்பு கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் தெரிவிக்கின்றேன்”, எனக் குறிப்பிட்டார்.