வவுனியாவில் பெட்ரோலை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் மக்கள்

326

 

வவுனியாவில் பெட்ரோலைப் பெற்றுக் கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகம் அருகாமையில் இன்று (20) காலை முதல் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெட்ரோலைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தமது வாகனங்களுடன் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு தரப்பினர், அத்தியாவசிய தேவைக்குரிய அரச உத்தியோகத்தர்களுக்கு அரச உயர்மட்ட தீர்மானத்திற்கு அமைவாக பெட்ரோல் களஞ்சியப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் நாடளாவிய ரீதியில் பெட்ரோல் விநியோகம் கடந்த சில தினங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மோட்டர் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார் என பொதுமக்கள் தமது வாகனங்களுக்கு பெட்ரோல் இன்றி அவதிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE