75வது சுதந்திர தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

201

அபு அலா

75வது சுதந்திரதினமான இன்று காப்போம் தொண்டு நிறுவனத்தினால் திருகோணமலை – புதுக்குடியிருப்பு கிராமத்தில் கல்விகற்கும் வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.

காப்போம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை போன்றவற்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் காப்போம் அமைப்பின் நிருவாகக் குழுவினர் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

SHARE