
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கிரீக்டவுனில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு அங்குள்ள வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்களை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபர் தன் கண்ணில்பட்டவர்களையெல்லாம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தார். இதில் ஒரு இளம்பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் ஒரு சிறுமி உள்பட 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மர்ம நபரை சுற்றிவளைத்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
படுகாயம் அடைந்த 13 பேரையும் போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒரு சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.