நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
பொகவந்தலாவ பிளான்டேசனுக்குட்பட்ட நோர்வுட் பகுதியை சேர்ந்த 7 தோட்ட தொழிலாளர்களே 06.08.2018 காலை பொகவந்தலாவ அட்டன் பிரதான பாதையில் கிளங்கள் வைத்தியசாலைக்கருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் அட்டன் பகுதியில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோர்வூட் கிளங்கன் தோட்டத்திற்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப் பகுதியை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலே
இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட நிலங்களை வெளியாருக்கு வழங்குவதை ஏற்க முடியாதென்றும், தோட்ட மக்களுக்கு குறித்த நிலம் பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் பிரதேச கிராம உத்தியோகஸ்தரினால் பணம் பெற்றுக்கொண்டு வெளியாருக்கு காணியை வழங்க முயற்சிப்பதாகவும், மேடி காணி விவகாரம் தொடர்பில் நீதிமன்ற தடையுத்தரவை பெறப் போவதாகவும் தெரிவித்தனர்.






