அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் நட்சத்திர வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர், தரவரிசையில் 30 ஆவது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கியரியாசை சந்தித்தார். முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய பெடரர், அடுத்த இரண்டு செட்களையும் 6–1, 7–5 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 44 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், பெடரர் 6–4, 6–1, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, லத்வியாவின் ஆஸ்டபென்கோ மோதினர்.
இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய மரியா ஷரபோவா 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதேவேளை மற்றொரு போட்டியில் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ள வீராங்கனையான ஜேர்மனியின் கெர்பர் 6–3, 3–6, 3–6 என்ற கணக்கில் சுலோவாகியாவின் சிபுல்கோவாவிடம் (35ஆவது இடம்) தோல்வியடைந்தார்.
இதனையடுத்து, இந்த ஆண்டு முதல் 3 கிராண்ட்ஸ்லாம் தொட ரில் (டென்மார்க்கின் வோஸ்னி யாக்கி, ருமேனியாவின் ஹாலெப்,
கெர்பர்) பட்டம் வென்ற மூன்று வீராங்கனைகளும் இத்தொடரிலி ருந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.