(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்)
மஸ்கெலியா பிரதேசபைக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட சமூக நலன் பயன்பாட்டுக்கு தோட்ட அம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் (கூரைத்தகடு) பிளாஸ்ரிக் நாட்காலிகளும் கையளிக்கப்பட்டது.
மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய எம்.உதயகுமார் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 25.09.2018 மேற்படி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான கே.சுரேஸ்குமார் , சுப்பமணியம், ரவீந்திரராஜா,கே. ரொஜ்குமார்,கே.யோகேந்திரன், பி. ஆனந்தன், பிரதேச அமைப்பாளர், தோட்ட தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.