முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு பகுதியில் உயர் ரக மீன்வகைகள் பல பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் இவ்வாறான மீன்வகைகள் பிடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவர்களுக்கு பெருந்தொகை வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த அதிர்ஷ்டம் மணற்குடியிருப்பு பகுதி மீனவர்களுக்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.