உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை, வெற்றிலை மற்றும் இன்னுமொரு சின்னம் உள்ளிட்ட மூன்று சின்னங்களில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, ஆகிய மாவட்டங்களில் கை சின்னத்திலும் மேலும் சில மாவட்டங்களில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறு கட்சிகளுடன் இனைந்து தகுதியான சின்னம் ஒன்றுடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை...
தாமரைமொட்டு சின்னத்தின் கீழ் முதலாவது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டம் கல்நேவ ,திருகோணமலை, கிண்ணியா ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களே இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோனால் கல்நேவ பிரதேசசபைக்கான வேட்பு மனு அநுராதபுரம் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஹசங்க ரத்னாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம் எதிர்வரும்...
பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜை அவர் படிக்கும் பள்ளியில் வைத்து தாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரவிருந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Lancashire- ஐ சேர்ந்த 31 வயதுடைய நபர் Husnain Rashid என்பவல் தீவிரவாதிகளுக்கு உதவியதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான வழக்குவிசாரணை Westminster Magistrates நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. மேலும், இவர் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்கும் முயற்சித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான...
தென் ஆப்பிரிக்காவில் ஏழை மாணவி ஒருவரின் வங்கி கணக்கில் நிதி உதவி காசோலையானது தவறுதலாக அதிகமாக அனுப்பபட்டதால் அந்த மாணவி அதனை எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
Walter Sisulu பல்கலைகழகத்தில் சுமார் 18,000 மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிதி உதவி காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஏழை மாணவிகளை தெரிவு செய்து அவர்கள் படிப்பதற்காக புத்தகம் வாங்கி கொள்வதற்கும், உணவுக்கும் மாதம் 108 டொலர் வழங்கப்படும்.
இந்த தொகையானது, மாணவிகளின்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10:58 மணிக்கு லே பகுதியில் இருந்து சுமார் 102 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கடியில் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. பொதுமக்கள்...
ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு.!
Thinappuyal News -
ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு என கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்தினார்.
தமிழரசு கட்சியின் தலைவர் தற்புாது ரணிலே உள்ளார். பதி்ல் தலைவரே சம்பந்தன் அவர்கள். கடந்த காலங்களில் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் போராடிவந்தோம். இன்று அவ்வாறில்லை. அதே...
கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் ம ாணவன் ஒருவனின் தலையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் தலையலங்காரம் அனைவரையும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது.
அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின் பெற்றோரின் அக்கறையின்மையும் பாடசாலைக்குரிய...
நெடுங்கேணியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு பொலிஸார் தீவிர விசாரணை.!
Thinappuyal News -
நெடுங்கேணி – பளம்பாசிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம்(10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யோகானந்தராசா கம்சிகா(20) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றம் மற்றும் 7 மாகாண சபைகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 26-ம் தேதியும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 8-ம் தேதியும் நடைபெற்றது.
மொத்தம் 128 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 256 மாகாணசபை உறுப்பினர்களை தேர்வு செய்ய நடந்த இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்...
நவாலி நாச்சிமார் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 50தேங்காய்கள் மற்றும் 10 மின்குமிழ்களை திருடிய இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இரு சிறுவர்களும் நவாலி அட்டகிரி பகுதியினை சேர்ந்த 19வயதுடைய நபர்கள் என பொலிஸார் கூறினர்.
கைதான மேற்படி இரு இளைஞர்களும் பல்வேறு திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரினால் கைதாகி மல்லாகம் நீதிமன்றின் பிணை அடிப்படையில் வெளியில் வந்தவர்கள் என பொலிஸார்,...