பாதையை புனரமைக்கக்கோரி பொகவந்தலாவ கிவ் தோட்டத் தொழிலாளர்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ அட்டன் பிரதான பாதையின் சென்ஜேன்டிலரி சந்தியிலே 28.09.2016 அன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சென்ஜேன்டிலரி சந்தியிலிருந்து கிவ் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான பாதையை புனரமைத்துத்தரக்கோரியே ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
பாதையை மறித்து டயர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாத 8 கிலோ மீட்டர் தூரம் வரையிலான...
முன்னால் போரளிகளையும் அரசியல் கைதிகளையும் மதிப்பளிக்கத் தெரியாத எதிர்கட்சிதலைவர் இரா.சம்பந்தன்
Thinappuyal News -
முன்னால் போரளிகளையும் அரசியல் கைதிகளையும் மதிப்பளிக்கத் தெரியாத எதிர்கட்சிதலைவர் இரா.சம்பந்தன்
முல்லைத்தீவு ஸ்ரீசுப்புரமணியம் வித்தியாலய சிறுவர்களின் கலை இலக்கிய விழாவும், பரிசளிப்பு விழாவும்
Thinappuyal -
சுப்புரமணியம் வித்தியாலய அதிபர் இ.செல்வநாயகம் தலைமையில் 27.09.2016 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் முகமாகவும் இக் கலை இலக்கிய விழா இடம்பெற்றது.
இதில் இப்பாடசாலையில் படித்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இப் பாடசாலையிலிருந்து மாகாணம், தேசியமட்டப் போட்டிகளில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் பரிசில்களும், கௌரவிப்புக்களும் இடம் பெற்றுள்ளது. இதற்கு பிரதம ரீதியாக முல்லைத்தீவு...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு, அவர்களது தேவை கருதி அலுவலக பாவனைக்காக தளபாடத் தொகுதி ஒன்றினை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டிற்க்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சினூடாக கொள்வனவு செய்து அதனை கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்...
வடக்கு முதல்வரின் துரித நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள்
Thinappuyal -
அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள்,தமது துரித விடுதலை குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் துரித நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்ற செய்தியை அறிந்த நிலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகள் இன்று (27) செவ்வாய்க்கிழமை மதியம் முதல் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளை...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலட்டை மற்றும் அழிந்து வரும் பவளப்பாறை வகைகளை கடத்த முயற்சித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களை இந்தியா இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வசமிருந்த கடலட்டைகள் 200 கிலோ கிராம் எடையுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போதே சந்தேகநபர்களிடம் இருந்த உலர்...
வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொரட்டுவ மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பெண் விபச்சார விடுதியை நடாத்திய குற்றத்திற்காகவும் மற்றைய நபர் அதில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
43...
மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரிய யோசித, தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி காரணமாக யோசிதவின் கடவுச்சீட்டு...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியின் போது, வடக்கில் தொடரும் சிங்கள மயமாக்கல், பௌத்த...
முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Thinappuyal -
வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், அரசியலமைப்பு என்ற போர்வையில் நாடு பிரிக்கப்படுமானால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான கருத்துக்களை தென்மாகாண...