யாழ் நீதிமன்றில் நீதிவான், வழக்கினை நிறைவு செய்து வெளியில் வரும் போது, கொழும்பு குற்றப்பிரிவினர் மூவரை வெள்ளை வானில் ஏற்றி சென்றுள்ளதனால் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. கேதீஸ்வரன், அஜந்தன், அகிலன் ஆகிய மூவரையுமே எழுமாற்றாக பிடித்து சென்றுள்ளதாகவும், இதன்போது ஏன் பிடிக்கின்றீர்கள் என மற்றவர்கள் வினவியுள்ளதுடன் விசாரணைக்காக பிடிப்பதாக வெள்ளை வானில், வந்த கொழும்பு குற்றப்பிரிவினர் கூறியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஏனையவர்கள்...
நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முப்படையினரும் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டுள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இராணுவத்தினர் ஒருபோதும் மனித உரிமைகளை மீறவில்லை, ஆனால் தற்போதைய நல்லாட்சி இராணுவத்தினரை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குறிப்பிட்டார். இராணுவத்தினர் குற்றங்கள் செய்திருப்பதாகவும் இதை தாம் ஒப்புக் கொள்வதாகவும் நல்லாட்சி கூறிவருகின்றது. “இவர்கள் குற்றம் செய்திருந்தால் தானே ஒப்புக்...
விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இரு தினங்களில் 73 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது. விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன. அதில் யாழ் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 16...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின்பிரகாரம், குறித்தசடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையாஅல்லது தற்கொலையா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  
சட்டவிரோதமாக யானைக் குட்டியினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைப் பெற்று தற்போது பிணையில் வெளியே வந்துள்ள உடுவே தம்மாலோக தேரர் தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றிடம் கோரியிருந்தார். அதற்கமைய அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து வெளிநாடு சென்று வந்துள்ள உடுவே தம்மாலோக தேரர் மீண்டும் தனது கடவுச்சீட்டை உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துலவிடம் இன்று கையளித்துள்ளார். லண்டனில் உள்ள பௌத்த நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மத நிகழ்வுகளில்...
கொழும்பில் மீண்டும் காசநோய் தலைதூக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு நகரசபையின் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கடந்த 8 மாதங்களில் குறித்த பிரதேசங்களில் 20 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பைஅதிகரிக்க மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உயர்ஸ்தானிகரின் வீடு, அலுவலகம் போன்றவற்றில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் அபூபக்கர்தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து இவர்தாக்கப்பட்டமையை அடுத்து இவரது பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதில்இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, மாங்குளம் - மல்லாவி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த தாய் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 4ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் ஆவர். உயிரிழந்தவரின் மகனான 14 வயதுடைய...
  பௌத்த மதம் என்ற ரீதியில் திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் ஆண்டாக எதிர்வரும் ஆண்டினைத் திட்டமிடுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தேரவாத பௌத்தின் தலைமையகமாக இலங்கையை மாற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மகாதர்ம பரப்புரை நிகழ்ச்சித்திட்டமானது, முப்பீடங்களின் தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி அவர்கள் நேற்று (12) பிற்பகல் அம்பலாங்கொடை பொல்வத்த ஸ்ரீ அக்காராம விகாரையில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வின்போது குறிப்பிட்டார். அமரபுரம் மகா நிக்காயாவின் கல்யாணிவன்ச...
வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணையில் இன்று (13.09) விவசாய திணைக்களத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 40.27 மில்லியன் ரூபாவில் 8.32 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத்தொகுதியே இன்று வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 420 பயனாளிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட உபகரணத் தொகுதியில் சிறிய ரக உழவுஇயந்திரம், மா அரைக்கும்...