சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சமூகத்தினரிடையே பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கப்படலாம்.எனினும், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒரே மனபாங்குடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல வருடங்களாக நாட்டில் சுதந்திரம் இருக்கவில்லை.
யுத்தம் நிறைவு பெற்றவுடன் பாரிய ஒடுக்குமுறை ஆட்சி இடம்பெற்றது....
இலங்கையில் 16 - 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
தற்கொலை செய்துக் கொள்வது இலங்கையின் பிரதான சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினை என்று கூறுவதில் தவறில்லை. ஏன் என்றால் இலங்கையில் 2015ஆம் ஆண்டில் தற்கொலையின் மூலம் மாத்திரம் 3051 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது....
இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவியளிக்கவுள்ளதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
அமரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த கருத்தை ஐக்கிய நாடுகளின் சபை அமர்வுக்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் செல்லும் வழி தொடர்பில் அமெரிக்கா தமது வரவேற்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நடைமுறை அரசாங்கம் பொருளார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை...
ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் 40 பேர் அடங்கிய குழு, பிறேசில் சென்றதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி செலவில் 28 பேர் மாத்திரமே ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றதாகம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் குழு தொடர்பில் தான் பயப்படப் போவதில்லை. ஒலிம்பிக் குழு தவறு...
கடந்த 2008-2009 காலப்பகுதியில் தமிழீழ மக்கள் மீது சிங்கள மகிந்த ராஐபக்சே அரசாங்கம் இன அழிப்புப் போரின்போது 'போரை' நிறுத்து என்ற ஒற்றை முழக்கத்தோடு தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்திலே நீண்ட போராட்டம் நடத்திக் கடும்அடக்கு முறைக்கு ஆளான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவன் என்ற உரிமையோடு 'எழுக தமிழ்' பேரணிக்கு உங்களை அழைக்கின்றேன். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் இனஅழிப்பை சந்தித்துள்ள...
கடந்த ஆட்சியில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது.
இதன்கீழ் தேசிய அரசாங்கத்தின் கழுகு கண்ணில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளார். இவர்கள் கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக உள்ளார்.
இந்நிலையில் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் கம்பஹா, மல்வானை காணி மற்றும் வீட்டை பறிமுதல் செய்யுமாறு கோரி இன்று காலை பூகொட நீதவான் நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பதற்கு பொலிஸ் நிதி மோசடி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் வாகனங்கள் பொதுமக்களின் வாகனங்களுடன் அடிக்கடி மோதிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
அதிக அளவிலான இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்டதில் நிலைகொண்டுள்ளார்கள்.
இதனால் தமது பொதுத் வேவைகளை பூர்த்திசெய்வதற்கு தினமும் இராணுவத்தினர் வீதிக்கு வருகின்றார்கள்.
இந்த நிலையில் வீதிக்கு வரும் இராணுவத்தினர் பொதுமக்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது அடிக்கடி மோதிக்கொள்வதால் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெலியின் மகன் ரமித் ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 6.30 அளவில் கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மது அருந்திய நிலையில் ரமித் ரம்புக்வெல. கார் ஒன்றை செலுத்திய அவர், மரம் ஒன்றில் மோதியுள்ளார்.
இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ரமித், ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலா ஒன்றின்போது விமானத்தின் அவசரக்கதவை திறக்க முயன்றார் என்ற...
இந்தியாவின் துறைமுக அபிவிருத்திகள் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது
என்று இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு துறைமுக விஸ்தரிப்பின்போது இந்திய நிறுவனங்களும் அதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன என்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக்கரை துறைமுகங்களின் அடித்தள கட்டமைப்புக்களை
அபிவிருத்தி செய்யும் அது கொழும்பின் துறைமுகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று
கூறப்படுகிறது.
இதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கையில் இருந்து பணி ஓய்வுப்பெற்று நாடு திரும்பவுள்ள...
அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குப்பற்றிய தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின் போதே இவர்கள் சந்தித்துக்கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தற்போது இடம் பெற்றுவரும் மாற்றங்கள் குறித்தும் ஒபாமா தனது வாழ்த்துக்களை நேற்றை தினம் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார்.
ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை...