இந்திய திரை உலகமே வியக்கும் விதத்தில் எடுத்துக்காட்டான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள், அபிஷேக் பச்சன்– ஐஸ்வர்யா ராய் ஜோடியினர். தங்களின் வெற்றிகரமான மண வாழ்க்கையின் பத்தாவது ஆண்டை இந்த நட்சத்திர தம்பதி நெருங்கும் நிலையில், இவர்களுக்கு இடையே பரஸ்பர புரிதல் எந்த அளவு இருக்கிறது என்று அறிய ஒரு ‘கேள்வி’ சோதனை.
ஒரே கேள்வியை இருவரிடமும் தனித்தனியே கேட்டபோது…
எந்த மாதிரியான ஆடைகளை அணிய உங்கள் துணை விரும்புவார்?
அபிஷேக்: இந்திய ஆடைகள்,...
விளையாட்டில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் அதிகமாக உள்ளனர் எனவும், விளையாட்டின் மூலமும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து திறந்துவைத்து உரையாற்றியபோதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”தேசிய விளையாட்டுக்களில் வடக்கு, கிழக்கு இளையோரும் பங்குபற்றி பிரகாசிக்க, தற்போது அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு, விளையாட்டுக்கு...
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். டாக்டர் வசந்த பண்டார
Thinappuyal -
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். அதைவிடுத்து வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கவே கச்சதீவை மீட்போம் என்ற விடயத்தை ஜெயலலிதா முன்வைக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் கூறுகையில், 1976 ஆம் ஆண்டு இந்திய பிரதமரான இந்திராகாந்தியால்...
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் இரு மாதங்களுக்குள் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும்
Thinappuyal -
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், தற்போது 15 வரை குறைக்கப்பட்டுள்ளன.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நாட்டிற்கு கிடைப்பதன் ஊடாக பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் இரு மாதங்களுக்குள் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர்...
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றமையினால் வடமத்திய, மத்திய,மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அதேநேரம் கடற்பரப்பில் நிலைகொள்ளும் காற்றின் வேகம் அதிகரித்துவருவதால் அதன் தாக்கத்தை தெற்கு, சப்ரகமுவ, மத்திய,வடமத்திய மாகாணங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் வளிமண்டள வியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத் துள்ளது.
எவ்வாறாயினும் காற்று கடற்...
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல் கள் தொடர்பில் நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதி களுக்கு எவ்விதத்திலும் இடமில்லை. இது குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிரான வகையில் கருத்துகளை தெரிவித்து நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தும் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரரேரணையை கொண்டு வருவதற்கான சாத்தியம் குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை...
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமையவேண்டும் என்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா ஒப்படைத்துள்ளார்.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உகந்ததாக கூறப்படும் ஓமந்தையில் காணப்படும் இரு இடங்களையும், தாண்டிக்குளத்திலுள்ள இடத்தையும் நேற்று முன்தினம் வவுனியாவுக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா நேரில் பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் மாவை.சேனாதிராஜா எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு...
பண்டாரவளை கும்பல்வெல மாஹமெவுனா அசபுவ காட்டுபகுதியில் நேற்று மாலை பரவிய தீயின் வேகம் குறைவடைந்தள்ளது.
மேலும், இத்தீயினால் சுமார் 2000 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காட்டு பகுதியில் கடும் காற்று வீசுவதனால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாகியிருந்தது.
தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்த குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தீ பரவும் வேகம் குறைவடைந்துள்ளதோடு,தீ பரவியுள்ள பகுதியிலுள்ள...
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்திலுள்ள விடத்தற்பளை, சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபா பெறுமதியான கொள்ளைப் பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இருவர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர்.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் மற்றும் சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைதடி, கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய இடங்களில்...
சுவாதி படுகொலை வழக்கில், ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி காலை மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை ஜூலை 1-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில்...