அரசியல் பழிவாங்கல்கள் குறித்து அமைச்சரவை தீர்மானம்

55
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்காமல் இருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இதனை தெரிவித்துள்ளார். – ada derana
SHARE