இனபடுகொலை என்று ” இது மோடி அவர்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?

368

1958170_362380900626408_1347757490283072278_n 10639629_1595762780658935_8115167146047014981_n 11013121_362380877293077_87274440403567977_n

ஒரு திராணியற்ற இலங்கை ராணுவம் ,
30 நாடுகளின் உதவியுடன்
என் மக்கள் இரண்டு லட்சம் பேரை உயிருடன் கொன்றும் ,
பல லட்சம் மக்களை உறுப்புகளை இழக்க வைத்தும்,
வாழ்க்கையை தொலைக்கவைத்தும்….
இரக்கமற்று ,
ஈழத்தில் நடத்திக்காட்டிய இனபடுகொலைக்கு
பாராட்டு தெரிவிக்கிறீரே!
உங்கள் இதயத்தின் ஈரம் எங்கே ?

சுதந்திரம் கேட்பவன் தீவிரவாதியா ?
தன்நாட்டு மக்களை கொல்வதா தீவிரவாத ஒழிப்பு ?
அய்யோ …ஒரு மனநோயாளிக்கும்,குடிகாரனுக்கும்
கூட தெரியுமே….!
“இலங்கை,இலங்கைக்குள்ளே நடத்தியது
தீவிரவாத ஒழிப்பு அல்ல
அது ஒரு இனபடுகொலை என்று ”
இது மோடி அவர்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?

ஊமை ஆட்சி ஆயுதம் கொடுத்து உதவினால்.,
விளம்பர ஆட்சி சான்றிதழ் கொடுத்து உதவுதே !
அய்யோ ..
நான் என்ன சொல்ல,என்ன செய்ய ?
நான் வரலாற்றிடம் விட்டுவிடுகிறேன்
வரலாறும்,அதன் வாசகர்களும் உங்களை விமர்சிக்கட்டும்

ஒன்றை தெரிந்துகொண்டேன் தெளிவாக
கொலையாலும் ,கொள்கையாலும் ,பேசும் வார்த்தையாலும்
சிறுபான்மை மக்களை அழவைத்து, ரசிப்பதில்
நீங்கள் உலக தலைவர்களில் முதல்வர்.

SHARE