உக்கிரமடையும் ரஷ்ய தாக்குதல்: கிழக்கு உக்ரைனில் 13 அப்பாவி மக்கள் பலி!

138

 

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் உக்கிரம் அடைந்துள்ளது. ரஷ்ய துருப்புகள் மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்ய துருப்புகள் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதன் பிராந்திய கவர்னர் செர்கிய் ஹைடாய் தெரிவித்துள்ளார்.

அங்கு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவிரோடொனெட்ஸ்க் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வெற்றி பெறவில்லை, ரஷ்ய துருப்புகளுக்கு இழப்பு ஏற்பட்டு, அவர்கள் பின்வாங்கினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE