எல்லை நிர்ணய அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை களையுமா மீளாய்வுக்குழு?

704

 

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையைபிறப்பிடமாகக் கொண்டவர்விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவிவகிக்கிறார்.

 

மாகா­ண­சபைத் தேர்­தலை ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருந்த மக்கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்கள். மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதும் உட­ன­டி­யாக தேர்தல் நடாத்­தப்­படும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இரண்டு மாதங்­க­ளுக்குள் மாகாண சபைத் தேர்­தலை நடாத்த முடியும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனால் அனைத்தும் தலை­கீ­ழாக மாறி­விட்­டது ஸ்ரீ. லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் சூளு­ரைத்­தி­ருந்­த­படி பாரா­ளு­மன்­றத்தில் மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டது. அறிக்­கைக்கு ஆத­ர­வாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ரேனும் வாக்­க­ளிக்­க­வில்லை. அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்த அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் எதிர்த்து வாக்­க­ளித்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் மாகாண சபைத்­தேர்தல் தாம­த­மாகும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. அறிக்­கையை பெரும்­பான்­மை­யினர் நிரா­க­ரித்­துள்­ளனர். வாக்­கெ­டுப்பு இடம்­பெற்­ற­போது பாரா­ளு­மன்­றத்தில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த 139 உறுப்­பி­னர்­களும் அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்­ளார்கள்.

மக்கள் விடு­தலை முன்­னனி உட்­பட 86 உறுப்­பி­னர்கள் ஏற்­க­னவே அறிக்­கைக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தாலும் வாக்­கெ­டுப்பு இடம்­பெற்ற சந்­தர்ப்­பத்தில் அவர்கள் சமு­க­மா­கி­யி­ருக்­க­வில்லை. இதன்­மூலம் எந்­த­வொரு கட்­சியும் எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை என்­பது தெளி­வா­கி­றது.

புதிய தேர்தல் முறைமை

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் அறிக்­கை­யின் சிபார்சினையடுத்து புதிய தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தொகுதி முறையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட கலப்பு தேர்தல் முறைமை உள்­ளூ­ராட்சி தேர்­தலில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 2012 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளூர் அதி­கார சபைகள் தேர்­தல்கள் (திருத்தச்) சட்டம் பாரா­ளு­மன்றில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

இந்தச் சட்­டத்தில் சில திருத்­தங்­களைச் செய்து 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  சட்­டத்தின் கீழ் மாகாண சபை­க­ளுக்கு கலப்பு விகி­தா­சார முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்தச் சட்டம் மாகாண சபை தேர்­த­லுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக மாகாண சபைத்­தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­ப­டு­வது முக்­கிய கார­ண­மாக அமைந்­தது.

இந்தச் சட்­டத்­தின்­படி மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்தை மேற்­கொள்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் ஐவர் கொண்ட தேசிய குழு­வொன்­றினை நிய­மிக்க வேண்­டி­யேற்­பட்­டது. ஜனா­தி­பதி இதற்­கென  முன்னாள் நில அள­வை­யாளர் நாயகம் கே.தவ­லிங்கம் தலை­மையில் குழு­வொன்­றினை நிய­மித்தார். இந்தக் குழு 2017 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் 4ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­ட­துடன் குழு தனது அறிக்­கையை 4 மாத காலத்­துக்குள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரிடம் கைய­ளிக்க வேண்டும் என்­பதும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் அர­சியல் கட்­சி­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே ஜனா­தி­பதி இக்­கு­ழுவின் அங்­கத்­த­வர்­களை நிய­மித்தார். மூன்று இனங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மூவர் இக்­கு­ழுவில் அங்கம் பெற்­றி­ருந்­தனர்.

 

அறிக்கை அமைச்­ச­ரிடம் கைய­ளிப்பு

மாகாண சபைத்­தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கடந்த பெப்­ர­வரி மாதம் 19ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அறிக்­கையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு முன்பு அமைச்சர் அறிக்கை தொடர்பில் அர­சியல் கட்­சி­களின் கருத்­து­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு ஆணைக்­கு­ழுவை வேண்­டி­யி­ருந்தார். இது தொடர்பில் அமைச்சர் ஆணைக்­கு­ழு­விற்கு கடந்த பெப்­ர­வரி மாதம் 16 ஆம் திகதி கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. என்­றாலும் ஆணைக்­குழு அதற்குச் சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை. பெப்­ர­வரி மாதம் 17ஆம் திகதி இதற்குச் சட்­டத்தில் இட­மில்லை எனத்­தெ­ரி­வித்து பதில் கடிதம் அனுப்­பி­யி­ருந்­த­துடன் பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திகதி அமைச்­ச­ரிடம் அறிக்­கையை கைய­ளித்­தது.

அமைச்­சரின் கோரிக்­கைக்கு இணங்க அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு எல்லை நிர்ணய ஆணைக்குழு அர­சியல் கட்­சி­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டி­ருந்தால் அறிக்­கையின் குறைகள் திருத்­தப்­பட்­டி­ருக்­கலாம்.

மாகாண சபை திருத்தச் சட்டம் 3 அ (11) பிரிவின் கீழ் அறிக்கை அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு இரண்டு வாரங்­க­ளுக்குள் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். அதற்­கி­ணங்க பெப்­ர­வரி 19 ஆம் திகதி கிடைக்­கப்­பெற்ற அறிக்­கையை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சபைத் தலை­வ­ரிடம் கைய­ளித்தார்.

மார்ச் 2 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்ட அறிக்கை மார்ச் 21 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு அறிக்­கை­யி­டப்­பட்­டது. என்­றாலும் அன்­றைய தினம் அறிக்­கையை விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் விருப்பம் தெரி­விக்­க­வில்லை. கட்சித் தலை­வர்கள் அறிக்கை தொடர்பில் பிர­த­மரின் தலை­மையில் கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தார்கள். ஆனால் கட்சித் தலை­வர்கள் கடந்த 6 மாத கால­மாக பேச்சு வார்த்­தைகள் நடாத்­தியும் பலன் ஏற்­ப­ட­வில்லை. காலம் வெறு­மனே வீண­டிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் மாகாண சபைத் தேர்தல் தாம­த­மாக்­கப்­ப­டு­வது  தொடர்பில் அர­சாங்­கத்தை பிர­தி­நி­திப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சிகள் மற்றும் இணைந்த எதிர்க்­கட்சி எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டன

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவும் மாகாண சபைத் தேர்­தலை தாம­தி­யாது நடாத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்றம் தீர்­மானம் ஒன்­றினை மேற்­கொள்ள வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யது. இத­னை­ய­டுத்தே கடந்த 24 ஆம் திகதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்றில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு தோற்­க­டிக்கப்பட்டது.

சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு பாதிப்பு

மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்­கையில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் அமைச்­சர்கள் எதிர்ப்பு வெளி­யிட்­டனர். குறிப்­பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், றிசாத் பதி­யுதீன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மேடை­களில் கடு­மை­யாக எதிர்த்­தனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் மனோக­ணேஷன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்லஸ் தேவா­னந்தா என்போர் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை சந்­தித்து எல்லை நிர்­ணய அறிக்­கையை தோற்­க­டிப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு கோரி இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். முன்னாள் ஜனா­தி­பதி இந்த கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அதன்­படி இணைந்த எதிர்­கட்­சி­யினர் எல்லை நிர்­ணய அறிக்­கையை எதிர்த்து வாக்­க­ளித்­தமை சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

அமைச்சர் பைசரும் எதிர்ப்பு

மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறை­மையின் கீழேயே நடாத்­தப்­பட வேண்டும். ஜனா­தி­ப­தி­யி­னதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­னதும் நிலைப்­பாடு இதுவே என்று அமைச்சர்  பைசர் முஸ்­தபா உறு­தி­யாக தொடர்ந்து கூறி வந்தார் அத்­தோடு அவர் முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் பழைய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்று போராடி வந்­ததை கொச்­சைப்­ப­டுத்­தினார். அக்­கட்­சிகள் சுய­நல அர­சியல் செய்­வ­தாக சாடினார். முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் பெரும்­பான்மை கட்­சி­களின் மிதி­ப­ல­கையில் பய­ணிப்­ப­தாக குற்றம் சாட்­டினார்.

என்­றாலும் அமைச்சர் பைசர் முஸ்­தபாவும் அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்தார்.

“ எல்லை நிர்­ணய அறிக்­கையில் பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு சாத­க­மான பல் தொகு­திகள் நிர்­ணயம் செய்­யப்­பட வில்லை அத­னாலே நான் எல்லை நிர்­ணய அறிக்­கையை எதிர்த்து வாக்­க­ளித்தேன். நான் புதிய தேர்தல் முறையை எதிர்க்க வில்லை. எல்லை நிர்­ணய அறிக்­கை­யையே எதிர்க்­கிறேன் இந்த அறிக்கை என்­னாலோ, எனது அமைச்­சி­னாலோ தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. ஒரு சுயா­தீன குழு­வி­னாலே தயா­ரிக்­கப்­பட்­டது. ஜனா­தி­ப­தியே இக்­கு­ழு­வினை நிய­மித்தார். சட்­டத்தின் விதி­க­ளுக்­க­மைய என்­னிடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை நான் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்தேன். அத்­துடன் எனது கடமை முடிந்து விட்­டது”  என்று அமைச்சர் பைசர் முஸ்­தபா கூறி­யுள்ளார்.

எல்லை நிர்­ணய அறிக்­கையில் காணப்­படும் குறைகள் நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும். குறைகள் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தற்­காக ஊழல் நிறைந்த விருப்பு வாக்கு முறை­மை­யான பழைய முறைக்கு பச்சை கொடி காட்­டு­வது ஆபத்­தா­னது எனவும் அமைச்சர் கூறி­யுள்ளார். பழைய தேர்தல் முறைக்குச் சென்றால் 25% பெண் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கும் வாய்ப்­பில்­லாமல் போகும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

எனவே எல்லை நிர்­ணய அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்ள சிறு­பான்மை சமூ­கத்­துக்குப் பாத­க­மான விட­யங்கள் அகற்­றப்­பட வேண்டும். முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்யும் வகையில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

எல்லை நிர்­ணய அறிக்கை

மீளாய்வுக் குழு

எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­த­தை­ய­டுத்து 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை திருத்த சட்ட மூலத்தின் 4 (12) ஷரத்­தின்­படி சபா­நா­யகர் ஐவர் கொண்ட எல்லை நிர்­ணய அறிக்கை மீளாய்வுக் குழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும். குழுவின் தலை­வ­ராக பிர­த­மரே நிய­மிக்­கப்­ப­டவும் வேண்டும். அதன் பிர­காரம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கடந்த 28 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐவர் கொண்ட குழு­வினை நிய­மித்தார். குழுவின் அங்­கத்­த­வர்­க­ளாக ஆர்.எஸ்.ஏ.எல். ரத்­நா­யக்க, பெரி­ய­சாமி முத்­து­லிங்கம், பேரா­சிரிர் பால­சுந்­த­ரம்­பிள்ளை, கலா­நிதி ஏ.எச்.எம். நௌபல் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை திருத்த சட்ட மூலத்தின் 4 (12) ஷரத்தின் படி இக்­குழு எல்லை நிர்­ணய அறிக்­கையை மீளாய்வு செய்து மீளாய்வு அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­க­வேண்டும். அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டதும் அவர் அர­சாங்க வர்த்­த­மா­னியில் வெளி­யி­டுவார். அறிக்கை  இரு மாதங்­களில் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்டு வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டால் மாகாண சபைத் தேர்­தலை ஜன­வ­ரியில் நடத்த முடியும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்­த­தே­சப்­பி­ரிய உறு­தி­ய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் மீளாய்­வுக்­குழு எந்­தெந்த விட­யங்­களில் மாற்­றங்­களைச் செய்­துள்­ளது என்­பதை நோக்­க­வேண்டும். சிறு­பான்மைக் கட்­சிகள் அறிக்­கையில் தமது சமூ­கங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை நிச்­சயம் சுட்­டிக்­காட்டும். அவ்­வா­றான முறைப்­பா­டு­களை மீளாய்­வுக்­குழு எவ்­வாறு கையா­ளப்­போ­கி­றது என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

மீளாய்வுக் குழுவின் அறிக்­கை­யையும் ஏற்­றுக்­கொள்­ளாத நிலை ஏற்­பட்டால் அந்த அறிக்­கைக்கும் அர­சியல் கட்­சிகள் எதிர்ப்பு தெரி­வித்து பழைய தேர்தல் முறைக்கே செல்ல வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தால் பழைய முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்­திலே 2/3  பெரும்­பான்மை பெற்றே ஆக­வேண்டும்.

 

தவ­லிங்கம் தலை­மை­யி­லான

எல்லை நிர்­ணயக் குழு

கே. தவ­லிங்கம் தலை­மை­யி­லான எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை சிறு­பான்மைக் கட்­சிகள் குறிப்­பாக முஸ்லிம் கட்­சிகள் பல­மாக எதிர்த்­துள்­ளன. பாரா­ளு­மன்ற விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட முன்பே முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் எதிர்ப்­பினை வெளி­யிட்டு வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாமை தொடர்பில் குழுவின் தலைவர் கே.தவ­லிங்கம் பின்­வ­ரு­மாறு கருத்து வெளி­யிட்­டுள்ளார். மாகா­ண­சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்­கையில் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூ­கத்­திற்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பெரும்­பான்மை சிங்­கள சமூ­கத்­துக்கு சாத­க­மாக தொகுதி எல்லை நிர்­ண­யங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டாலும் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரித்துக் கொள்­வ­தற்கு சிங்­கள மக்­களைப் பிர­நி­தி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளமை ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கி­றது.

எல்லை நிர்­ணய அறிக்­கையில் குறைகள் அல்­லது அநீ­திகள் காணப்­பட்டால் அது தொடர்பில் எந்­த­வொரு நப­ரு­டனோ அல்­லது குழு­வு­டனோ பகி­ரங்க விவா­தத்­திற்கு நான் தயா­ராக இருக்­கிறேன், சவால் விடு­கிறேன்.

எல்லை நிர்­ணய அறிக்­கையில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எல்­லைகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சுமத்­தி­யுள்ளார். தமிழ் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அநீ­தி­யாக தொகுதி எல்லை நிர்­ண­யங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது. சிங்­கள சமூ­கத்­துக்கு சாத­க­மாக எல்­லைகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றெனில் எல்லை நிர்­ணய அறிக்­கையை ஏன் பெரும்­பான்மை அர­சியல் கட்­சிகள் எதிர்த்­தன என்­பது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. அவர்­க­ளுக்கு சாத­க­மாக எல்­லைகள் வகுக்­கப்­பட்­டி­ருந்தால் அவர்கள் ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருக்க வேண்­டு­மல்­லவா?

பல்­தொ­குதி கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாது மாகாண சபைத் தொகுதி எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. அவ்­வா­றான பிர­தே­சங்கள் இரண்டு தொகு­தி­க­ளாக வகுக்­கப்­பட்டே எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டன. அதனால் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அப் பிர­தே­சத்தில் வாழும் ஏனைய இன­மக்­க­ளுக்கோ பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை.

அனைத்து அர­சியல் கட்­சி­க­ளுக்கும் எழுத்­து­மூலம் அறி­விப்­புச்­செய்து அவற்றின் பரிந்­து­ரை­களைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்பே அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அப்­ப­டி­யென்றால் எல்லை நிர்­ணய அறிக்கை தயா­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் பரிந்­து­ரை­களை வழங்­கு­வதில் கரி­சனை செலுத்­த­வில்­லையா? என்று எண்ணத் தோன்­று­கி­றது.

இலங்­கையில் முதன் முதல் தேர்தல் தொகுதி பிரிக்­கப்­பட்ட போதும் பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­தன. எல்லை நிர்­ணயம் என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல என்றும் தெரி­வித்­துள்ளார் தவலிங்கம் எனவே எல்லை நிர்­ண­யத்தில் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன என்­பதை அவர் ஏற்­றுக்­கொள்­கின்றார் என்­பது தெளி­வா­கி­றது.

மீளாய்வு குழு உறுப்­பினர்

கலா­நிதி நௌபல்

மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் சிறு­பான்மை சமூ­கத்­துக்கு குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீ­திகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை மீளாய்வுக் குழுவின் உறுப்­பினர் கலா­நிதி ஏ.எஸ்.எம்.நௌபல் ஏற்றுக் கொண்­டுள்ளார்.

மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்­தினால் முஸ்லிம் சமூகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் மீளாய்வு செய்து தீர்வுகளை முன்வைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

கே.தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் அங்கத்தவராக இருந்து செயற்பட்ட பேராசிரியர் மர்ஹூம் ஹஸ்புல்லாஹ்வும் தனது பணியின் போது சமூகத்தின் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இன்று அவர் எம்முடன் இல்லை என்றாலும் அவரது சமூகப்பற்று நினைவு கூறப்படுகிறது.

மர்ஹூம் ஹஸ்புல்லாஹ் தனது சமூகத்துக்காக வாதிப்பட்டமையை ஒருபோதும் தான் பிழையாகக் கருதவில்லை. அது அவரது கடமை என கே.தவலிங்கமும் தெரிவித்துள்ளார்.

கலாநிதி எ.எஸ்.எம்.நௌபலும் மர்ஹூம் ஹஸ்புல்லாஹ்வின் சமூகத்தின் மீதான பற்றுதலைப் பாராட்டியுள்ளார். எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஹஸ்புல்லாஹ் பகிரங்கப்படுத்தினார். அவர் உள்ளிட்ட குழு தயாரித்த எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதையறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்றும் நெளபல் எம்மிடம் தெரிவித்தார். அந்த மகிழ்ச்சியுடனே அவர் மறுதினம் எம்மை விட்டுச் சென்று விட்டார்.

அறிக்கை மீளாய்வு

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது. மீளாய்வுக்குழு அறிக்கையை பலகோணங்களில் ஆராயவுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை சுட்டிக்காட்டுவதற்கு அரிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது.

எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சுயநலநோக்கினைத் தவிர்த்து சமூக நோக்கோடு இவ்விவகாரத்தைக் கையாள ஒன்றுபட வேண்டும்.

SHARE