கரும்புள்ளிகளை நீக்கும் உப்பு

577
அழகாக இருக்கும் நம் முகத்தில் கரும்புள்ளிகள் வந்து அலங்கோலப்படுத்துகின்றன.என்னதான் மேக்கப் போட்டாலும், இந்த கரும்புள்ளிகள் மறைந்தபாடில்லை, இந்த கரும்புள்ளிகளை விரட்ட பலவிதமான அழகு குறிப்புகள் உள்ள நிலையில் அதில் ஒன்றான கரும்புள்ளிகளை நீக்கும் உப்பு பற்றி தெரிந்துகொள்வோம்.1. 1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.பின்பு கலந்து வைத்துள்ள கலவைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

2. 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை ஒரு பௌலில் போட்டு கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் முகத்திற்கு மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

3. 1 டேபிள் ஸ்பூன் தேனில், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

4. முதலில் உப்பை நீரில் கலந்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான தயிரை தடவி 10 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமம் வறட்சியடையாமல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

5. ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.

இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

SHARE