இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக பெண்கள் வேலைப்பளுவின் காரணமாக இரவில் நீண்ட நேரம் வேலை முடித்துவிட்டு, தாமதமாக தூங்கி, காலையில் வேகமாக எழுவதால், சரியான அளவு ஓய்வு கண்களுக்குக் கிடைக்காமல், கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து அழகைக் கெடுக்கின்றது.
இந்த கருவளையங்களைப் போக்க எத்தனையோ வழிகள் இருக்கலாம். இருப்பினும் கண்ட கண்ட கிறீம்களை உபயோகிப்பதை விட வீட்டில் இருந்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சிறந்தது.
அந்தவகையில் பேக்கிங் சோடா கருவளையத்திற்கு சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.
மேலும் பேக்கிங் சோடா சருமத்தில் எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது.
தற்போது பேக்கிங்க சோடாவை கொண்டு எப்படி கருவளையத்தை போக்குவது என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
- சீமைச்சாமந்தி டீ – சிறிது
பயன்படுத்தும் முறை
முதலில் பேக்கிங் சோடாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும்.
பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.
இந்த முறை கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்குவதோடு, கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளைப் போக்கி, கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.
இந்த செயலை தினமும் செய்ய வேண்டாம். வாரத்திற்கு 3 முறை இரவில் படுக்கும் முன் செய்யுங்கள். முக்கியமாக கண்களுக்கு போதிய ஓய்வைக் கொடுங்கள்.