கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்புவறிய மாணவர்களுக்கு அல்கிம்மா அமைப்பு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு

378

கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பு நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.

அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும், வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தையல் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

எஸ்.ஐ.எம்.சாதாத் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இந்நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹவி) கலந்து கொண்டதுடன், அதிதிகளாக அந்நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் ஏ.எல்.ஜாபீர், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அதிபரும், இந்நிறுவனத்தின் ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.நெய்னா முஹம்மட், ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரியும், ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எம்.ஏ.காதர், மற்றும் இந்நிறுவனத்தின் செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், மற்றும் அயல் கிராமங்களில் இருந்து கால் நடையாக பாடசாலை வரும் மாணவ மாணவிகள் இனங்காணப்பட்டு முதற்கட்டமாக பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஏழு மாணவர்களுக்கும், மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்குமாக பன்னிரண்டு மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.

வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மூன்று குடும்ப பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

SHARE