காருக்கு மட்டுமே தனியாக பூஜை போட்ட கீர்த்தி சுரேஷ்

87

 

தமிழ் சினிமாவில் ஊ மேல ஒரு கண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்களை நெஞ்சை கொள்ளை கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமாவில் நுழைந்த நேரத்தில் அழகாக பாவாடை தாவணியில் வந்து கலக்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

சினிமாவில் நுழைந்த சில காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற படம் நடித்து இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த, சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி படங்களில் நடித்திருந்தார்.

அடுத்து மாமன்னன், தசரா, போலா ஷங்கர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.

ஆயுதபூஜை கொண்டாட்டம்
தமிழகத்தில் ஆயுத பூஜை, விசயதசமி கொண்டாட்டங்கள் நன்றாக நடந்து வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது விலையுயர்ந்த காருக்கு தனியாக பூஜை போட்டுள்ளார். தனது வளர்ப்பு நாயுடன் நின்று காருக்கு பூஜை போடும்போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கும் காரின் விலை மட்டுமே ரூ. 1.20 கோடி முதல் ரூ. 1.80 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

SHARE