தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
அண்மையில் இவர் நடித்த ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ், புன்னகையை பகிர்ந்து கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
maalaimalar