சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம்

434

வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம் எதிர்வரும் 29ம் திகதி நாடு திரும்பியதும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜோதிட கணிப்பிபன்படி தற்போது கூடாத காலம் நடைபெறுவதால்,  நன்மை கருதி அரசில் செயற்பாடுகளைத் தவிர்த்து வெளிநாட்டில் தங்கியிருந்ததாகவும் எதிர்வரும் 29ம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜோதிட கணிப்பிற்கு அமைவாக எதிர்வரும் 29ம் திகதிக்குப் பின்னார் தனக்கு அதிர்ஷ்டமான வெற்றிகரமான காலம் அமையும் என ஜோதிடர்கள் எதிர்வு கூறியுள்ளனராம்.

அதன் மீது நம்பிக்கை கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்வரும் 29.06.14ற்குப் பின்னர் தமது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளகதாவும், மிகவிரைவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதில் அவர் ஆர்வம் கொண்டிப்பதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

mmm71  _583029_300 _575118_supporter300Chandrika1999

SHARE