சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு நீர்த்தாங்கி திறந்து வைப்பு!

270
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் நிதி உதவியுடன் மன்-அல்-அஸ்ஹர்.ம.வி தேசிய பாடசாலையில் நீர்த்தாங்கி ஒன்று  நேற்று (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் மற்றும் மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு நீர்த்தாங்கியினை வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹீர்,பாடசாலை ஆசிரியர்கள்,மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

SHARE