சீனாவில் ஒரே நாளில் 3,570 பேருக்கு கொரோனா தொற்று!

85

 

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனினும் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி வந்த நிலையில், சீனாவில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த 24 மணித்தியாலத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 3,570 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 2,888 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,37,580 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE