சுதந்திர தின ஒத்திகை – விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

80
75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (28), நாளை (29) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் சுதந்திர தினம் வரையான காலப்பகுதியில், அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் மத்திய வீதி – காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து என். எஸ். ஏ. சுற்றுவட்டம் வரை மற்றும் சைத்திய வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் நோக்கிய வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து குறித்த காலப் பகுதியில் மட்டுப்படுத்தப்படும்.

இதன் காரணமாக குறித்த திகதிகளில் ஒத்திகை மற்றும் சுதந்திர தின நிகழ்வுகளின் போது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். – ada derana

SHARE