ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் மஹிந்தவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக பிரபல நட்சத்திரங்களான சல்மான்கானும், ஜாக்குலினும் இலங்கை வந்தடைந்தனர். இதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டோவின் பூர்வீகம் இலங்கையாகும். இவர்கள் வந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்