ஜூன் மாதம் 01 முதல் பொலித்தீனுக்குத் தடை

98
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பொலிதீன் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்தார்.
அதன்படி பிளாஸ்டிக் ஸ்பூன், ஃபோர்க்ஸ், நெகிழி மாலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் குடிநீர் கோப்பைகள் உள்ளிட்டன தடை செய்ப்படடுமெனவும் அவர் குறிப்பிட்டார். அதற்கான விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற சர்வதேச கழிவு நீக்கும் தினத்தை கொண்டாடும் நிகழ்வில் கல்லந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சியின் பெருங்கடல் பிளாஸ்டிக் குறைப்பு நடவடிக்கை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் இணைந்து சர்வதேச ஜீரோ குப்பை தினத்தை கொண்டாடியது.
2025 ஆம் ஆண்டுக்குள் மேலும் பல பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சாஸ் பாக்கெட்டுகள் போன்றவை இன்னும் தடை செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டில் நாளாந்தம் ஏறக்குறைய 7,000 மெற்றிக் தொன் குப்பைகள் உருவாகின்றன என்றும் தலைவர் கூறினார். இந்த நாட்டில் உற்பத்தியாகும் 60 வீதமான குப்பைகளை மிக இலகுவாக உரமாக மாற்ற முடியும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி அதிகார சபை என்பன இணைந்து எஞ்சியுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான பொறிமுறையை அமைத்துள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே இதன்போது தெரிவித்தார்.
SHARE