தவத்திரு வேலன் சுவாமிகள் விசாரணைக்கு அழைப்பு

72
“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணம் சிறிலங்கா பொலிசாரினால் அழைப்பாணை இன்று மதியம் 1 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக தவத்திரு வேலன் சுவாமிகள் அறிவித்துள்ளார்.
சிவில் உடையில் வந்த சிறிலங்கா பொலிசாரே இவ் அழைப்பாணையை தனக்கு வழங்கியதாகவும், வழக்கு விசாரணைக்கு 20/02/2023 அன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
தவத்திரு வேலன் சுவாமிகள்,
சிவகுரு ஆதீன முதல்வர்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.
SHARE