கராத்தே போட்டியில் வெள்ளி வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய வீராங்கனை

143

24.09.2022 அதாவது இன்றையதினம் யாழ்ப்பாணம் மந்திகை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற வட மாகாண ரீதியிலான திறந்த மாகாண மட்ட கராத்தே போட்டியில், தினேஷ் மார்ஷல் ஆர்ட்ஸ் கழகத்தின் வீராங்கனை செரோண்யா பாலசுப்பிரமணியம் அவர்கள் 68 கிலோ கீழ்ப்பட்ட பிரிவில் குமித்தேவில் பங்கு பற்றி, இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இவரை பயிற்றுவித்த சிகான் T.P.தினேஸ்குமார் மற்றும் சென்சி ஞா.ஜீவன் அவர்களுக்கும், விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன் அவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

SHARE