நிலநடுக்கத்தை முன்பே கணித்த ஆராய்ச்சியாளர் – பல நாடுகளுக்கு எச்சரிக்கை

68
துருக்கியை தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எந்த நாட்டில் ஏற்படும் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் கடந்த மூன்று நாட்களாக உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி பகுதியில் ஏற்படும் என்று துல்லியமாக கணித்துள்ளார்.
SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அவரின் அந்த பதிவில் கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ மத்திய – தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும் என்று பதிவிட்டுள்ளார்.
இதை அப்போது பலர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் டுவிட்டரில் மீண்டும் ப்ரான்க் ஹூகர்பீட்ஸ் பதிவிட்டு இருக்கிறார்.
மத்திய துருக்கியில் பாதிக்கப்பட்டவர்களுடன் என் இதயம் இருக்கிறது. இப்பகுதியில் இது போன்ற நிலநடுக்கம் ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொன்னேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் அடுத்தடுத்து புவியியல் சூழல் குறித்து வெளியிடும் கருத்துக்கள் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஒரு பெரும் அளவிலான நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக வந்து இந்திய பெருங்கடலில் முடிவடையும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் எப்போது ஏற்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.
SHARE