பதுளை, பஹலவத்தை பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதியினர் கைது

119

 

பதுளை, பஹலவத்தை பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதியரை பதுளை பொலிஸார் நேற்று காலை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் இரண்டு மில்லியன் ரூபா கொள்ளைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, 60 வயதுடைய நபரும் அவரது 57 வயது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைக்கு அடிமையான இளைஞரை பயன்படுத்தி திருட்டு
திருடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் பாதணிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞரைப் பயன்படுத்தி தம்பதியினர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மூன்றாவது சந்தேக நபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், முறையான விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

SHARE