கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாதுக்க, போப்பே பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது, வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பியோடியதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் போப்பே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.