பாரா­ளு­மன்­றத்தைக் கேட்டு அர­சாங்கம் யுத்தம் நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக 3 தட­வைகள் பிரே­ரணை கொண்­டு ­வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. இதன்­ போ­து­ கூட பாரா­ளு­மன்­றத்தில் இவ்­வி­டயம் குறித்து ஆலோ­சிக்­கப்­ப­ட­வில்லை.

444

பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற்று நீங்கள் யுத்­தத்தை நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 3 தட­வைகள் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்தில் ஆலோ­சனை நடத்­த­வில்லை. இந்­த­நி­லையில் தற்­போது ஐ.நா.விசா­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வது பய­னற்றதாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைக்­குழு இலங்­கைக்கு எதி­ரான விசா­ர­ணை­யினை மேற்­கொள்ளக் கூடாது எனக் கோரி பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை மீதான விவாதம் குறித்து ஆராய்­வ­தற்­காக நேற்று சபா­நா­யகர் சமல் ராஜபக்ச தலை­மையில் கட்சித் தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

சபா­நா­யகர் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் அர­சாங்­கத்தின் பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான தினேஷ் குணவர்­தன, அமைச்­சர்­க­ளான பஷில் ராஜபக்ச, டியூ குண­சே­கர, வாசு­தேவ நாண­யக்­கார, ஜே.வி.பி.யின் தலைவர் அநு­ர­கு­மார திச­நா­யக்க, எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வான ஜோன் .அம­ர­துங்க ஆகியோர் கலந்­து­ கொண்­டனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் பங்­கேற்­றனர்.

இந்­தக் ­கூட்­டத்தில் ஆளும்­ கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அசல ஜாகொ­டகே, மாலினி பொன்­சேகா, ஜானக பண்­டார, உதித் லொக்­கு­பண்­டார, ஏ.எச்.எம். அஸ்வர், சாந்த பண்­டார, ஜே.ஆர்.பி. சூரி­யப்­பெ­ரும, நிமல் விஜ­ய­சிங்க ஆகிய 9 எம்.பி.க்களினால் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­குழு இலங்­கைக்கு எதி­ரான விசா­ரணை மேற்­கொள்­ளக்­கூ­டாது என்று கோரி சமர்ப்­பித்­தி­ருந்த பிரே­ரணை குறித்து ஆரா­யப்­பட்­டது.

இதன்­போது கருத்து தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்,

இந்தப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றது. இதற்கு நாம் ஆத­ரவு வழங்க மாட்டோம். இவ்­வா­றான ஒரு பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­டு­வ­தா­னது காலம் கடந்த விட­ய­மாகும்.

பாரா­ளு­மன்­றத்தைக் கேட்டு அர­சாங்கம் யுத்தம் நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக 3 தட­வைகள் பிரே­ரணை கொண்­டு ­வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. இதன்­ போ­து­ கூட பாரா­ளு­மன்­றத்தில் இவ்­வி­டயம் குறித்து ஆலோ­சிக்­கப்­ப­ட­வில்லை.

சர்­வ­தேச விசா­ரணை தொடர்­பான பிரே­ரணை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நிறை­வேற்­றப்­பட்ட உட­னேயே இந்த விசா­ர­ணைக்­கு­ழுவை ஏற்­றுக்­கொள்­ளப்­ போவ­தில்லை என்றும், அதற்கு ஒரு­போதும் ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்றும் இலங்கைப் பிர­தி­நிதி தெட்டத்தெளி­வாக கூறி­விட்டார். இந்­த­நி­லையில் இந்த விசா­ரணை குறித்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­திப்­பதில் எந்­த­வித அர்த்­தமும் இல்லை.

அர­சாங்கம் இந்த விட­யத்தில் எப்­போதோ தீர்­மானம் நிறை­வேற்­றி­ விட்­டது. இந்­த­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் விவா­திப்­பது அர்த்­த­மற்ற செயற்­பா­டாகும். இந்த பிரே­ர­ணைக்கு நாம் எதிர்ப்பு தெரி­விக்­கின்றோம்.

இதற்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது. தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் இந்தப் பிரே­ரணை விவா­திக்­கப்­ப­டு­வ­தனால் நாட்டில் சர்ச்­சையே ஏற்­படும். இத­னை­விட வேறொன்றும் இடம்­பெ­றப்­ போ­வ­தில்லை என்று தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து ஏனைய கட்சித் தலை­வர்­களும் கருத்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

 

SHARE