பேருந்தொன்று கட்டுப்பாட்டையிழந்து வடிகானுக்குள் விழுந்து விபத்து

88

 

கற்பிட்டி பகுதிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி வடிகானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் கற்பிட்டி,பாலாவி பிரதான வீதியின் மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மூவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பேருந்து சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

SHARE