போர்களமாக மாறிய எரிபொருள் நிரப்ப நிலையம்!

107

 

கலேவெல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கலேவெல மகுலுகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (23) பிற்பகல் பல தடவைகள் போர்க்களமாக மாறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மகுலுகஸ்வெவ பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குண்டர்களை விரட்டியடித்த பெண்கள்
இவ்வாறானதொரு நிலை இன்று 23ம் திகதி பிற்பகல் எரிபொருள் விநியோகத்தின் போது குண்டர்கள் வந்து அப்பகுதி மக்களை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்காத வேளையில், பெண்கள் குழுவொன்று வந்து அந்தக் கும்பலைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

அப்போது, ​​பெண்கள் குண்டர்களை விரட்டியடித்த போதும், பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொலிசார், இராணுவத்தினர் என அனைவரும் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை குண்டர்கள் கைப்பற்றியதாக எரிபொருள் எடுக்க வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்தாலும் பொலிஸாரிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் ஏனைய குழுக்களும் தம்மை தாக்கியதாக நுகர்வோர்கள் ஏற்கனவே மகுலுகஸ்வெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE