மது போதையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

143

 

மது போதையில் இருந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வீ.திவ்யா என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்
திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் வந்த கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரை மடக்கிப்பிடித்த மக்கள்
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் உப்புவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE