மத்துகம-அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொளவதற்க்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் 3 நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது
நேற்று முன்தினம் இரவு லொறியொன்று மோதியதில் இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.