மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத்திடம் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து டொக்டர் நலிந்த ஹேரத்திடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவர்கள் சங்கத்தினால் பிரசூரிக்கப்பட்ட புத்தகமொன்றில் காணப்பட்ட விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.